சமையல் குறிப்புகள்! ஆலு ``டம்ப்ளிங்ஸ்'' --உருளைக்கிழங்கு கச்சோரி
உருளைக்கிழங்கு ஹல்வா உருளைக்கிழங்கு -2, பால்-1 கிண்ணம், கோவா-50 கிராம், முந்திரி, திராட்சை,பாதாம் பருப்பு - தேவையான அளவு (துண்டுகளாக்கியத...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_9476.html
உருளைக்கிழங்கு ஹல்வா
உருளைக்கிழங்கு -2, பால்-1 கிண்ணம், கோவா-50 கிராம், முந்திரி, திராட்சை,பாதாம் பருப்பு - தேவையான அளவு (துண்டுகளாக்கியது), ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன், கேசரி பௌடர் - 2 துளி, சர்க்கரை - 1/4 கிலோ, (அவரவர் ருசிக்கு கூட்டி குறைத்து போட்டுக் கொள்ளலாம்), நெய் - 100 கிராம், கார்ன்ஃப்ளார் - 2 ஸ்பூன்.
செய்முறை : உருளைக்கிழங்குகளை தோல் சீவித் துறுவிக் கொள்ளவும். இதை கோவாவுடன் சேர்த்து மிக்சியிலிட்டு அரைக்கவும். தண்ணீர் சேர்க்கா-மல் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும்.
கனமான பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகளை வறுத்து அரைத்து அரைத்த இந்த விழுதைச் சேர்க்கவும்.
நிதானமான சூட்டிலேயே கை நிறுத்தாமல் கலவையை வதக்கவும். கலவை சுருண்டு மணம் வரும் போது சர்க்கரை, கேசரிப்பவுடர் சேர்க்கவும். மீதமுள்ள பாலில் கார்ன்ஃப்ளாரை கரைத்து இதனுடன் ஊற்றி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளறிக் கொண்டிருக்கவும்.
பாத்திரத்தில் உருண்டு வரும் போது நெய்தடவிய தட்டில் கொட்டி ஆறிய பிறகு துண்டுகளாக்கவும். வித்தியாசமான டேஸ்ட்.-டுடன் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு அல்வா.
உருளைக்கிழங்கு சேவு
பெரிய உருளைக்கிழங்கு - 3, கறுப்பு உலர்ந்த திராட்சை - 50 கிராம், வறுத்த வேர்க்கடலை பருப்பு - 50 கிராம், முந்திரிப் பருப்பு - 25 கிராம், பச்சைமிளகாய் நீளமாகக் கீறியது -3, எண்ணெய், உப்பு தே.அளவு, சோம்புத்தூள் - லு ஸ்பூன், கறிவேப்பிலை-ஒரு கொத்து, சர்க்கரை - லு ஸ்பூன்.
செய்முறை : உருளைக்கிழங்குகளை தேய்த்துக் கழுவி பெரிய துவாரமுள்ள கொப்பரைத் துறுவியில் துறுவி உடனே நீரில் போடவும். கைகளிலேயே துருவலை அலசி அலசி ஒரு துணியில் பரவலாகப் போட்டு நிழலில் உலர்த்தவும்.
இதை ஒரு துணியால் ஒற்றி ஒற்றி ஈரம் போக்கவும்.
வாணலியின் எண்ணெயைச் சுடவைக்கவும். வலைக்கரண்டியில் (அவல் பொறிக்கும் கரண்டி) எண்ணெய் ஊற்றி, சூடானதும் சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக உருளைக்கிழங்குத் துறுவலைப் போட்டு சிவக்காமல் பொரித்து எடுக்கவும். பொரித்ததை ஒரு சுத்தமான ப்ரெளன் பேப்பர் மீது பரவலாகப் போடவும். வலைக்-கரண்டி இல்லையெனில் காய்கறி வடிக்கும் தட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் உலர்ந்த திராட்சை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை, கடலை, மிளகாய் கீறல் இவற்றைத் தனித்தனியே பொரித்தெடுக்கவும் இத்துடன் சோம்புத்தூள், உப்பு, சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்து உருளைக்-கிழங்குடன் பொரித்ததுடன் கலக்கி நன்றாகக் குலுக்கவும். வித்தியாசமான டேஸ்ட்டுடன் இருக்கும் சேவு இது!
சுக்கா காஷ்மீரி ஆலு தம்
ஒரே அளவான சிறு வகை உருளைக்கிழங்கு - 1/2 கிலோ, உறைந்த ஆடையுடன் கட்டித் தயிர் - 1/2 லிட்டர், மசாலா செய்ய: (இஞ்சி-1 துண்டு, பூண்டு-4 பல், கஸுரி மேதி - 2 ஸ்பூன் - சிவந்த மிளகாய் -4), நெய்-3+2 ஸ்பூன், தக்காளி ஷூஸ் கெட்டியாக ஒரு கிண்ணம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : உருளைக்கிழங்கை வேக வைத்து உரிக்கவும். டூத்பிக்கினால் கிழங்கு ஒவ்வொன்றையும் குத்திவிடவும்.
வாணலியில் 3 ஸ்பூன் நெய்விட்டு உருளைக்-கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்.
இஞ்சி முதல் மிளகாய் வரையுள்ள சாமான்-களை வெண்ணெய் போல அரைத்து, உப்பு சேர்த்து ரோஸ்ட் ஆகிக் கொண்டிருக்கும் உருளைக் கிழங்-குடன் போடவும். இரண்டும் சேர்ந்து பொன்னிற-மானதும். தயிர் முழுவதையும் கடைந்து ஊற்றவும்.
தயிர் கொதித்து வற்ற ஆரம்பித்ததும் தக்காளி ஜூஸைச் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்புப் பதமாக வந்தவுடன் இறக்கவும்.
உருளைக்கிழங்கு டிக்கி
உருளைக்கிழங்கு -4, ப்ரெட் ஸ்லைஸ் - 2, வேகவைத்த பட்டாணி - 1 கரண்டி, மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன், ஓமம் -1 ஸ்பூன், ரவை - 2 ஸ்பூன், துறுவிய வெங்காயம் - 1 கரண்டி, கொத்தமல்லி விதைத் தூள் -1 ஸ்பூன், ருசிக்கு உப்பு. நெய் -சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை : உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து உதிர்த்து வைக்கவும்.
ப்ரெட் ஸ்லைஸ்களை தண்ணீரில் நனைத்து பிழிந்து வைக்கவும். மற்ற எல்லா சாமான்களுடனும் உருளைக்கிழங்கு, ப்ரெட் ஸ்லைஸ்களுடன் சேர்த்து நன்கு பிசையவும்.
கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி வைக்கவும்.
வடை போல தட்டி நான்ஸ்டிக் தவாவில் நெய் தடவி வட்டமாக சிறிது இடைவெளிவிட்டு வைத்து வேக வைக்கவும்.
பொன்னிறமாக மாறியதும் ஸாஸ், சட்னியுடன் பரிமாறவும்.
உருளைக்கிழங்கு கச்சோரி
உருளைக்கிழங்கு - 5, கடலைமாவு _ 2 கரண்டி, பச்சை கொத்தமல்லித் தழை - 1 கரண்டி, சீரகம் - 1 ஸ்பூன், தேங்காய்த் துறுவல் - 1 கிண்ணம், பச்சை மிளகாய்த் துறுவல் - 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சர்க்கரை - 1/2 ஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை : உருளைக்கிழங்கை வேகவைத்து உரிக்கவும். உரித்த கிழங்குகளைத் துறுவி மாவு போலப் பிசையவும்.
இத்துடன் மாவு, உப்பு சேர்த்து பிசையவும். கொத்தமல்லித்தழை, சீரகம், தேங்காய்த்துறுவல், சிறிது, உப்பு, மிளகாய்த்துறுவல் சர்க்கரை ஆகியவற்றை கலந்து மசாலாக் கலவையாக்கி தனியாக வைக்கவும்.
இந்த உருளைக்கிழங்கு கலவையை கொஞ்சம் எடுத்து ஈரக்கையில் உருட்டவும். பின் இதைக் கிண்ணம் போல செய்து அதனுள் மசாலாக் கலவையை 1 ஸ்பூன் போட்டு உருட்டி மூடவும். விரிசல் இல்லாமல் உருட்டி எண்ணெயில் உடனுக்குடன் பொரித்துப் பரிமாறவும்.
ஆலு ``டம்ப்ளிங்ஸ்'' (ஜெர்மன் டி.ஷ்)
உருளைக்கிழங்கு - 5, கெட்டியான பால் - ஒரு லிட்டர், ஏலக்காய் -5, ட்ரை ஃப்ரூட்ஸ் கலவையாக ஒரு கிண்ணம், வாழைப்பழம் - 1, உணவுக்கு சேர்க்கும் நிறங்கள் - பச்சை 2 சொட்டு, மஞ்சள் 2 சொட்டு, பிங்க் 2 சொட்டு, சர்க்கரை பொடித்தது - 1/2 கிண்ணம், ரோஸ் எஸ்ஸென்ஸ் - 2 சொட்டு, தனியாக சர்க்கரை - 2 ஸ்பூன்.
செய்முறை : உருளைக்கிழங்கைக் கழுவி தோல்-சீவி வேக வைக்கவும், இதை மிக மிருதுவான கூழாகப் பிசையவும். இதை மூன்று பிரிவுகளாக்கி வைக்கவும். பாலில் ஏலக்காய் போட்டு சிவக்கக் காய்ச்சவும். அதனுடன் சர்க்கரையைப் (2 ஸ்பூன்) போடவும். மூன்றாகப் பிரித்து வைத்த உருளைக்-கிழங்குக் கூழில் பச்சை, மஞ்சள், பிங்க் என்று ஒவ்வொரு நிறம் சேர்க்கவும். அத்துடன் மூன்றிலும் சர்க்கரைப் பொடியை சமமாகப் பிரித்துப் போட்டு ஒவ்வொரு பிரிவிலும் ரோஸ் எஸ்ஸென்ஸ் சேர்த்து எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாகக் கலவையை உருட்டவும். ட்ரை ஃப்ரூட்ஸ் கலவை வாழைப்பழம் இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை ஓட-விடவும். இக்கலவையை சிறு உருண்டை-களாகத் தயாரிக்கவும். உருளைக்கிழங்கு உருண்-டையை கிண்ணம் போலச் செய்து இந்தப் பழ உருண்டையை உள்ளே வைத்து மூடவும்.
கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் இந்த உருண்டைகளைப் போட்டு அடுப்பில் மூடாமல் வேகவைக்கவும். உருண்டை மேலே மிதந்து வரும் போது இறக்கி, குளிரவைத்தோ சூடாகவோ சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு தட்டை
உருளைக்கிழங்கு -5, அரிசி -100 கிராம் (ஊற வைத்தது), பச்சை மிளகாய் -4, பெருங்காயம் - 1 ஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, ரவையாக தூள் செய்த நிலக்கடலைப் பருப்பு - 3 ஸ்பூன், பொரிப்பதற்கு - எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : உருளைக்கிழங்கை தோல்சீவி சிறுதுண்டுகளாக நறுக்கவும். ஊறிய அரிசி, மிளகாய், உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து நீர்விடாமல் கெட்டியாக அரைக்கவும். ஒன்றிரண்டு துண்டுகளாக்கிய கறிவேப்பிலை, நிலக்கடலைப் பருப்பு ஆகியவற்றையும் அதனுடன் கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் கலவையைத் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்!
Post a Comment