அசத்தல் சமையல்! கொத்துமல்லி புலவு
கொத்துமல்லி புலவு தேவையானவை: பாசுமதி அரிசி & 2 கப், பெரிய வெங்காயம் & 2, எலுமிச்சம்பழச் சாறு & 2 டேபிள்ஸ்பூன், தயிர் & அர...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6101.html
கொத்துமல்லி புலவு
தேவையானவை: பாசுமதி அரிசி & 2 கப், பெரிய வெங்காயம் & 2, எலுமிச்சம்பழச் சாறு & 2 டேபிள்ஸ்பூன், தயிர் & அரை கப், உப்பு & தேவையான அளவு, தேங்காய்ப்பால் & அரை கப், நெய் & 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் & 1 டேபிள்ஸ்பூன்.
அரைக்க: மல்லித்தழை & ஒரு கட்டு, பச்சை மிளகாய் & 4, இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 5 பல், பட்டை & 1, லவங்கம் & 2, ஏலக்காய் & 1.
செய்முறை: அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பாலுடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். மல்லித்தழையை சுத்தம் செய்து மற்ற பொருட்களுடன் ஒன்றாக அரைத்தெடுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் நெய், எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்துடன் சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.
பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தயிர், ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து நன்கு கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.
Post a Comment