சமையல் குறிப்புகள்! ‘வடகறி’
‘வடகறி’ ‘‘ ‘வடகறி’ என்பது சென்னையின் புகழ்பரப்பும் சைட்&டிஷ்களில் ஒன்று. அதை செய்யத் தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு & 1 கப், பெர...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4524.html
‘வடகறி’
‘‘ ‘வடகறி’ என்பது சென்னையின் புகழ்பரப்பும் சைட்&டிஷ்களில் ஒன்று. அதை செய்யத் தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு & 1 கப், பெரிய வெங்காயம் & 2, தக்காளி & 3, தேங்காய்ப்பால் & ஒரு கப், புதினா, மல்லித்தழை & சிறிது, மிளகாய்தூள் & 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், உப்பு & ருசிக்கேற்ப, எண்ணெய் & தேவையான அளவு. அரைக்க: இஞ்சி & 1 துண்டு, பூண்டு & 5 பல், சோம்பு & 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் & தலா ஒன்று, பச்சை மிளகாய் & 3.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அந்த மசாலா விழுதில் இருந்து சிறிதளவு எடுத்து, கடலைப் பருப்பு அரைத்த கலவையில் கலந்து, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து, எண்ணெயைக் காயவைத்து சிறுசிறு பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுங்கள்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும், தக்காளி, அரைத்த மசாலா விழுது, மிளகாய்தூள், மஞ்சள் தூள், புதினா, மல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு பாதி அளவு தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அதில் பக்கோடாக்களை உடைத்துப் போடுங்கள். இது 5 நிமிடம் கொதித்ததும் மீதியுள்ள பாலை சேர்த்து கிளறி இறக்குங்கள். (தளதளவென இல்லாவிட்டால், சிறிது கொதிக்கும் நீரை சேர்க்கலாம்). இதுதான் ‘வடகறி’.
இட்லி, இடியாப்பம், ஆப்பம், பொங்கல் போன்ற எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மசால்வடை மீந்துவிட்டால் கூட இதுபோல் செய்யலாம்’’.
Post a Comment