தென்னிந்திய சமையல்! சோள சாதம் & மோர்க்குழம்பு
கோயம்புத்தூரின் அசத்தலான இன்னொரு காம்பினேஷன் சோளச்சோறும் மோர்க்குழம்பும். இரண்டுமே செய்வதற்கு எளிதான செய்முறைகள். உடலுக்கு தீங்கு விளைவிக்கா...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2865.html
கோயம்புத்தூரின் அசத்தலான இன்னொரு காம்பினேஷன் சோளச்சோறும் மோர்க்குழம்பும். இரண்டுமே செய்வதற்கு எளிதான செய்முறைகள். உடலுக்கு தீங்கு விளைவிக்காத, கொங்குநாட்டுப் பாரம்பரிய உணவுகள்.
-----------------------------------------------------------------------------------------------
சோள சாதம்
தேவையானவை: வெள்ளை சோளம் (உதிர்த்தது) & 2 கப், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: சோளத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து, உரலில் அல்லது ஆட்டுக்கல்லில் போட்டுக் குத்திக்கொள்ளுங்கள். அந்த வசதி இல்லாதவர்கள், மிக்ஸியில் போட்டு, விப்பர் பிளேடால் 2 சுற்று சுற்றிக்கொள்ளுங்கள். தோல் பிரிந்து வரும். அதை எடுத்து, முடிந்தவரையில் தோல் இல்லாமல் புடைத்து, நன்கு களைந்துவைத்துக் கொள்ளுங்கள். 4 முதல் 5 டம்ளர் தண்ணீர் வைத்து சோளத்தை வேகவையுங்கள். வெந்த சோளத்தை மத்தால் குத்தி, மசித்து, உப்பு சேர்த்து, மோர்க் குழம்புடன் பரிமாறுங்கள்.
அடுத்த நாள் வைத்துக் கொள்வதென்றால், உருண்டைகளாக உருட்டி, தண்ணீரில் போட்டு வையுங்கள். தேவைப்படும்போது எடுத்து, மோர் ஊற்றிக் கரைத்துக் குடிக்கலாம். உடலுக்கு வலுவுடன் நாவுக்கும் செம ருசி.
----------------------------------------------------------------------------------
மோர்க்குழம்பு
தேவையானவை: புளிக்காத புது தயிர் & 2 கப், உப்பு & தேவையான அளவு.
அரைக்க: பச்சரிசி & 2 டீஸ்பூன், துவரம்பருப்பு & ஒரு டீஸ்பூன், சீரகம் & ஒரு டீஸ்பூன், தனியா & 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் & 5 முதல் 6, கறிவேப்பிலை & சிறிது, சின்ன வெங்காயம் & 4, தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு & ஒரு துண்டு, பூண்டு & 2 பல்.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 2, எண்ணெய் & ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றில் பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ஊறவையுங்கள். அரை மணி நேரம் ஊறியதும், மற்ற எல்லாவற்றுடனும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். தயிரை கடைந்து கொள்ளுங்கள். அரைத்த விழுதை மோரில் சேர்த்துக் கலக்கி, உப்பு சேருங்கள். இதை அடுப்பில் வைத்து, பொங்கி வரும்போது இறக்கி, எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டுங்கள். சோள சாதத்துக்கேற்ற, சுவையான மோர்க்குழம்பு ரெடி.
குறிப்பு: கொங்கு நாட்டில் இந்த மோர்க்குழம்பில் காய்கள் எதுவும் சேர்ப்பதில்லை.
‘‘பத்திரிகைகளில் வரும் சமையல் குறிப்புகளில் அடிக்கடி, ‘இனிப்பு இல்லாத கோவா’ என்று குறிப் பிடப்படுகிறதே! அதை வீட்டிலேயே செய்யலாமா? எப்படிச் செய்வது? அதை எதற்கெல்லாம் பயன் படுத்தலாம்? விளக்கமாகச் சொன்னால் உதவியாக இருக்கும்..’’
-------------------------------------------------------------------------------
Post a Comment