சமையலை எளிதாக முடித்து, ருசியாக சாப்பிட சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...
உங்கள் வீட்டு சமையலை எளிதாக முடித்து, ருசியாக சாப்பிடவேண்டுமானால் இதைப் படியுங்கள். * தோசைக்கு மாவு அரைத்து, கலக்கும் போது அதில் இரண்டு த...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2241.html
உங்கள் வீட்டு சமையலை எளிதாக முடித்து, ருசியாக சாப்பிடவேண்டுமானால் இதைப் படியுங்கள்.
* தோசைக்கு மாவு அரைத்து, கலக்கும் போது அதில் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை(சீனி) சேருங்கள். மாவு சீக்கிரமே புளித்துவிடும். இட்டிலி, தோசை மாவில் சிறிதளவு இளநீர் கலந்தாலும் மாவு சீக்கிரம் புளித்து விடும்.
* இடியாப்பத்திற்கு மாவு பிசையும் போது அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணை சேருங்கள். இடியாப்பம் அதிக மென்மையாக இருக்கும்.
* முறுக்கு, பக்கோடா போன்றவை தயாரிக்கும் போது அதில் சிறிதளவு பச்சரிசி மாவு சேருங்கள். நல்ல ருசி கிடைக்கும்.
* மிக்சர் தயாரிக்க வனஸ்பதியை பயன்படுத்தினால், மிக்சர் அதிக மொறுமொறுப்பாக இருக்கும்.
* ஒவ்வொரு முறையும் மிக்சியை பயன்படுத்திய பின்பு சிறிதளவு தண்ணீரை விட்டு ஓடவிடுங்கள். மிக்சி சுத்தமாகிவிடும். பிளேடும் கூர்மையாக இருக்கும்.
* மிக்சியில் கொள்ளளவுக்கு மேல் பொருட்களை கொட்டி இயக்காதீர்கள். அப்படி பயன்படுத்தினால் பிளேடு, மோட்டார் போன்றவைகள் விரைவாகவே கெட்டுப்போகும்.
* மின்சாரத் தொடர்புடைய எந்த சமையல் அறையைக் கருவியை பயன்படுத்தும் போதும் ரப்பர் செருப்பை அணிந்து கொள்ளுங்கள். அதன் மூலம் ஷாக் அடிப்பதில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.
* சமையல் பொருட்களை பேக் செய்து கொண்டிருக்கும் போது மைக்ரோ வேவ் ஓவனை திறக்கக்கூடாது. திறந்தால் சூடான வாயு வெளியேறி, குளிர் உள்ளே போய்விடும். இதன் மூலம் சமையல் நேரம் அதிகரித்து விடும்.
* தண்ணீர் தன்மை கையில் இருந்தால், கையை நன்றாக துடைத்துவிட்டு மின்சார உபகரணங்களை இயக்குங்கள்.
* சமையல் அறை கருவிகளை இயக்கிமுடித்ததும், சுவிட்சை ஆப் செய்து விட்டு, பிளக்கையும் உருவி எடுத்துவிடுங்கள்.
* கோளாறான மிக்சியை ஒரு போதும் இயக்கவேண்டாம். அதை நீங்களே சரிசெய்து ஓடவிட்டுப் பார்க்கும் வேலையிலும் ஈடுபடாதீர்கள்.
* பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் போன்றைவைகளை அதிக நேரம் வேகவைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் போய்விடும்.
* அரிசியை ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் கழுவுங்கள். அதை கழுவிக்கொண்டே இருந்தால் அதில் இருக்கும் வைட்டமின்களும், தாதுக்களும் கிடைக்காமல் போய்விடும்.
* காய்கறி மிகச் சிறிய துண்டுகளாக வெட்டாமல், சற்று பெரிய துண்டுகளாக வெட்டி கூட்டோ, குழம்போ தயாரியுங்கள்.
* வெள்ளரிக்காய், கேரட், மாங்காய், பூசணிக்காய் போன்றவைகளின் தோலை அதிக தடிமனாக வெட்டி விடவேண்டாம். அப்படி வெட்டினால் அதில் இருக்கும் சத்துக்கள் உடலில் சேராது.
* சமையலில் ஒரு போதும் சோடா தூளை சேர்க்கக்கூடாது. சேர்த்தால் அந்த உணவில் இருக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்து கிடைக்காது.
* கோதுமை மாவை பெரிய ஓட்டையுள்ள சல்லடையில் சலியுங்கள். சிறிய ஓட்டையுள்ள சல்லடையில் சலித்தால் அதில் இருக்கும் தவிட்டு சத்து உடலுக்கு கிடைக்காமல் போய்விடும்.
Post a Comment