சமையல் குறிப்புகள்! சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள் கோழிக்கறி 1 கிலோ தக்காளி 5 தேங்காய் துருவல் - 2 கப் கடுகு - கால் தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - 1 பூண்டு 1 சின்ன வ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2015.html
தேவையான பொருட்கள்
கோழிக்கறி 1 கிலோ
தக்காளி 5
தேங்காய் துருவல் - 2 கப்
கடுகு - கால் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4
இஞ்சி - 1
பூண்டு 1
சின்ன வெங்காயம் -4
பச்சை மிளகாய் -5
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சம் தூள் கால் தேக்கரண்டி
கறிமசால் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை தேவைக்கு,
கொத்துமல்லி இலை தேவைக்கு
உப்பு தேவைக்கு
எண்ணை தேவைக்கு.
செய்முறை:
கோழிக்கறியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை நன்றாக கழுவி வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணையை ஊற்றி, சூடானவுடன் தேங்காய் துருவல், பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை மஞ்சம் தூள் ஆகியவற்றை போட்டு வறுக்கவும். அதை இறக்கி சூடு ஆறிய பிறகு, அதில் தேவையான தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, எண்ணை விட்டு இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அதில் மிளகு தூள், மஞ்சம் தூள், மல்லி தூள், கறிமசாலாதூள் ஆகியவற்றைப் போட்டு மணம் வரும்போது கிளறிவிட்டு, அதில் கோழிக்கறி துண்டுகளை போட்டு, தக்காளியை நறுக்கி போடவும்.
உடனே ஒன்றரை கப் தண்ணீரை விட்டு, தேவைக்கு உப்பு போட்டு மூடி வைக்கவும். நன்றாக வெந்த பிறகு, வறுத்து அரைச்ச மசாலாவைப் போட்டு கிளறவும். நன்றாக வெந்தவுடன் இறக்கி விடவும். அதில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்து ஊற்றவும். தேவைக்கு மல்லி இலையைப் போட்டால் சூடான சிக்கன் குழம்பு....சுவையாக ரெடி!
Post a Comment