இறைவன் கவனித்துக்கொண்டிருக்கிறான்! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைவன் கவனித்துக்கொண்டிருக்கிறான் மனிதன் நேர்மையாகவும் நீதியோடும் வாழ வேண்டும். குறிப்பாக, பொறுப்பான பதவிகளில் இருப்போர், இந்த விஷயத்தில் ...

இறைவன் கவனித்துக்கொண்டிருக்கிறான் மனிதன் நேர்மையாகவும் நீதியோடும் வாழ வேண்டும். குறிப்பாக, பொறுப்பான பதவிகளில் இருப்போர், இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதி நிலவும். மனிதன் நேர்மை தவறி, நீதி வழுவினால், அதனால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாவான்; போராட்டங்கள் வெடிக்கும்; மக்களின் அமைதி கெடும். இதை நாம் வரலாற்றில் அன்றிலிருந்து இன்று வரை பார்த்து வருகிறோம். பொது வாழ்வில் ஈடுபடும் நாட்டுத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் நேர்மை தவறக் கூடாது. அதனால் நாட்டில் குழப்பங்களும் போராட்டங்களும் தோன்றும். நாட்டு மக்கள், ஆள்வோரை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதை ஆள்வோர் உணர வேண்டும். "நாட்டு மக்கள் கவனிக்காவிட்டாலும் இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறான்' என்ற மனசாட்சியோடு பொதுவாழ்வில் ஈடுபடுவோர் நடந்து கொள்ள வேண்டும். ""அறிந்து கொள்வீர்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள். உங்களுள் ஒவ்வொருவரும் தம் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சியாளர் மக்களுக்குப் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண் தம் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடும்பம் குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தனது கணவனின் குடும்பத்திற்கும் அவர் குழந்தைகளுக்கும் பொறுப்பாளர் ஆவாள். ஓர் அடிமை தம் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பு ஆவான். அவனும் விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்வீர்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! உங்கள் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்'' (புகாரி, முஸ்லிம்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வுலகில் வாழும் அனைவருமே, மறுமையில் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவ்வளவு ஏன்? அவர்களது பொறுப்பில் தவறிழைக்கும் போது இவ்வுலகிலேயே அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களது வேலை பறிக்கப்படும். அவர்களது பதவிகள் பறிபோகும். எனவே ஒவ்வொருவரும் தமது பொறுப்பைச் சரிவர நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு கடமையாற்றும்போது பொதுவாழ்வில் ஈடுபடுவோர் பொதுமக்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பொதுச் சொத்துக்களைக் கவனமாகக் கையாள வேண்டும். அதில் கையாடல், மோசடி செய்வது கூடாது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ""நாடாளும் பொறுப்பை இறைவன் ஓர் அடியாருக்குக் கொடுக்க, அவர் நாட்டு மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் இறந்துவிட்டால் அவருக்கு இறைவன் சொர்க்கத்தைத் தடை செய்து விடுகிறான்'' (புகாரி, முஸ்லிம்). மற்றொரு நபிமொழி கூறுவதைக் கேளுங்கள். ""இறைத் தூதர் (ஸல்) அவர்கள், எங்களிடத்தில் (சொற்பொழிவு மேடையில்) நின்று பொதுச் சொத்துக்களில் மோசடி செய்வது குறித்து எச்சரித்தார்கள். அப்போது, மறுமை நாளில், கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தை தம் தோளில் சுமந்தவாறே ஒருவர் வந்து, "என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அலற வேண்டாம். ஏனெனில் அன்று உமக்கு எதையும் செய்ய என்னால் முடியாது (உலகில் பொதுச் சொத்தில் ஒட்டகம் ஒன்றை மோசடி செய்தவரே அவ்வாறு வருவார்). இது குறித்து நான் அன்றே (உலகில் உள்ளபோதே) சொல்லி விட்டேன் என்று கூறிவிடுவேன். இந்த ஒட்டகம் போன்றே குதிரையை சுமந்தவாறு மறுமையில் வந்து என்னிடம் உதவி கோர வேண்டாம்; ஆடு ஒன்றை சுமந்தவாறு வர வேண்டாம்; அசைந்தாடும் துணிமணிகளைச் சுமந்தவாறு வந்து என்னிடம் உதவி கோர வேண்டாம்; பொன்னையும் வெள்ளியையும் தம் கழுத்தில் சுமந்தவாறு வந்து உதவி கோர வேண்டாம்' என்று குறிப்பிடுகிறார்கள்'' (புகாரி, முஸ்லிம்). பொதுச் சொத்தில் கையாடல் செய்துவிட்டால் அவர் கையாடல் செய்த துணிமணிகள், குதிரை, ஆடு, ஒட்டகம், நிலம் போன்றவற்றை அவர் சுமந்தவாறு மறுமையில் வருவார் என இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது. எனவே பொதுச் சொத்தைக் கையாள்வோர் கவனமாக நேர்மை, நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி எத்தனைக் கோடி அளவுக்கு மோசடி, ஊழல் செய்தார்களோ, அந்த அளவுக்கு மறுமை நாளில் கொடி ஒன்று அவர்களது முதுகில் ஏற்றப்படும். அதன் மூலம் அவர்கள் செய்த மோசடி மக்கள் மத்தியில் தெரிவிக்கப்படும். நபி(ஸல்) அவர்கள் அதை இப்படிக் கூறுகிறார். ""மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று ஏற்றப்படும். அவனது மோசடி அளவுக்கு அது உயரமாக ஏற்றப்படும். அறிவீர். பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்று அதில் மோசடி செய்தவனைவிட மிகப் பெரும் மோசடிக்காரன் வேறெவனுமில்லை'' (புகாரி 31 86, முஸ்லிம் 35 79). எனவே பொது வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிப்போம்! ஈருலகிலும் வெற்றி பெறுவோம்!

Related

அமுத மொழிகள் 4709566317316139353

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item