சமையல் -கேள்வி-பதில்! ருசியான சத்தான ரசம் எப்படித்தயாரிக்கலாம்?
ருசியான சத்தான ரசம் வைக்க என்னென்ன சேர்த்து, எப்படித் தாளித்து ரசம் தயாரிக்கலாம்? தினமும் ரசத்துக்கு எடுத்துக் கொள்ளும் புளியின் அளவில் சிற...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_1047.html
ருசியான சத்தான ரசம் வைக்க என்னென்ன சேர்த்து, எப்படித் தாளித்து ரசம் தயாரிக்கலாம்?
தினமும் ரசத்துக்கு எடுத்துக் கொள்ளும் புளியின் அளவில் சிறிது குறைத்துக் கொண்டு, தக்காளியின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம். நாட்டுத் தக்காளியை உபயோகித்து ரசம் செய்தால் சுவை நன்றாக இருக்கும். பெங்களூர் தக்காளி சேர்க்க விருப்பப்பட்டால், நாட்டுத் தக்காளியையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
சத்தான ரசத்துக்கு சிறிதளவு வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம். சூடான வாணலியில் வெந்தயம் (இரண்டு பேருக்கு வைக்கும் ரசத்துக்கு 3 கிராம் வெந்தயம் போதும்), மிளகு, துவரம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு வறுத்துப் பொடி செய்தால். ருசியான ரசப்பொடி தயார், ரசம் செய்யும் போது தக்காளி, புளி, உப்பு, மஞ்சள் பொடி, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயப் பொடி (விருப்பப்பட்டால் பூண்டு) சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு அதில் செய்து வைத்துள்ள ரசப் பொடியைப் போட்டு, பருப்புத் தண்ணீர் விட்டு இறக்கி வைக்கவும். தனியாக ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு, கடுகு போட்டு வெடிக்கவிட்டு ரசத்தில் கொட்டினால் சத்தான, ருசியான ரசம் ரெடி.
Post a Comment