எலுமிச்சம் பழ பானகம்:
சுத்தமான நீர் - 1 லிட்டர் எலுமிச்சம் பழம் - 2 (சாறு எடுத்து கொள்ளவும்) பொடித்த வெல்லம் - 100 கிராம் கிராம்பு - 5 (பொடி செய்து கொள்ளவும்) மி...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_9925.html
சுத்தமான நீர் - 1 லிட்டர்
எலுமிச்சம் பழம் - 2 (சாறு எடுத்து கொள்ளவும்)
பொடித்த வெல்லம் - 100 கிராம்
கிராம்பு - 5 (பொடி செய்து கொள்ளவும்)
மிளகு - 1/4 தேக்கரண்டி
இந்துப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
நீரில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி கொள்ளவும். பின்பு எலுமிச்சை சாறு, கிராம்புதூள், மிளகுதூள், உப்பு கலந்து பருகவும்.
பயன்:
கோடை காலத்தில் ஏற்படும் களைப்பு, தலைசுற்றல் மயக்கம் நீங்கும். ஜீரண கோளாறுகள் நீங்கும். அதிக வியர்வையால் ஏற்படும் களைப்பு நீங்கும். ஒரு நாளைக்கு இரு முறை பருகலாம். கோடையில் பருகும் குளிர்பானத்திற்கு பதிலாக இந்த சத்துள்ள பானத்தை பருகலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுதூள் அல்லது பச்சை மிளகாய் கலந்து சாலட் ஆக சாப்பிடலாம். இந்த சாலட்டை நீரிழிவு நோயாளிகள் தினமும் 1 கப் அளவிற்கு சாப்பிட்டு வருவது உடலுக்கு மிக நல்லது.
Post a Comment