சமையல் குறிப்புகள் ! ‘‘தானிய புலாவ்’’--‘‘பொடி ரைஸ்’’--‘‘பருப்பு அடை’’-- ‘‘மாம்பழ ஜாம்’’-- ‘‘அவல் புட்டு’’
‘‘தானிய புலாவ்’’ தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி -250 கிராம், முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம் -தலா 25 கிரா...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_933.html
‘‘தானிய புலாவ்’’
தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி -250 கிராம், முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம் -தலா 25 கிராம் (ஊற வைத்து வேக விடவும்),
நெய் -2 ஸ்பூன், உப்பு -தேவையான அளவு, முந்திரி, திராட்சை, வறுத்தது சிறிதளவு.
செய்முறை : பாசுமதி அரிசியை ஒரு மடங்குக்கு இரு பங்கு தண்ணீர் வைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கவும். முளைகட்டிய தானியங்களை தேவையான உப்பு சேர்த்து ஆவியில் வேக விடவும். சோளம் வேகாது. அதனால் சோளத்தை 30 நிமிடம் ஊற வைத்து பின்பு எல்லா தானியங்களுடன் சோளத்தையும் சேர்த்து வேக விடவும். சாதத்துடன் வெந்த இந்த தானியங்களை நெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும். மேலே முந்திரி, திராட்சை வைத்து அலங்கரித்துக் கொடுக்கவும். எல்லாவித புரோட்டீன் சத்துக்களும் அடங்கியது இந்த தானிய புலாவ். சுடச்சுடக் கொடுத்தால் குழந்தைகள் ரசித்துச் சாப்பிடுவார்கள்.
‘‘பொடி ரைஸ்’’
தேவையான பொருட்கள் : எள்ளு, கொள்ளு, துவரம் பருப்பு -தலா 25 கிராம், மிளகு -ஒரு ஸ்பூன்,
நெய் -4 ஸ்பூன், பாசுமதி அரிசி -200 கிராம், உப்பு- தேவையான அளவு.
செய்முறை : பாசுமதி அரிசியை ஒரு மடங்குக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு ஊற விசில் விட்டு இறக்கவும். எள்ளு, கொள்ளு, துவரம் பருப்பு, மிளகை வெறும் வானாலியில் தனித் தனியாக வறுக்கவும். ஆறிய உடன் மிக்ஸியில் பொடித்து, சாதத்துடன் சேர்க்கவும் அத்துடன் நெய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்கவும்.
கமகம வாசனையுடன்இருக்கும் இதை நிமிஜத்தில் தயார் செய்து விடலாம். சிப்ஸ் இருந்தால் சாப்பாடு கடகடவென உள்ளே இறங்கி விடும்.
‘‘பருப்பு அடை’’
தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - 250 கிராம், பாசிப் பருப்பு, துவரம் பருப்பு - 25 கிராம், சோயா - ஒரு கப், உளுத்தம் பருப்பு - 4 ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
பூண்டு தோல் உரித்தது - 4 பல், மிளகு - ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 25 மி.லி., வெங்காயம் நறுக்கியது - 1, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை : புழுங்கல் அரிசியை தனியாக ஊற வைக்கவும். பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, சோயாவை ஊற வைத்து ஊற வைத்து இஞ்சி, பூண்டு மிளகு சேர்த்து கெட்டியாக கரகரப்பாக கரைக்கவும். அரிசியை தனியாக அரைத்து எல்லா மாவையும் ஒன்று சேர்த்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து கலந்து அடைக்கல்லில் அடை தட்டி இரு புறமும் எண்ணெய் விட்டு வேக விட்டு எடுக்கவும்.
குழந்தைகள் வெல்லம் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம். பெரியவர்கள் மிளகாய்ப் பொடி, அவியல் வைத்தும் சாப்பிடலாம்.
‘‘மாம்பழ ஜாம்’’
தேவையான பொருட்கள் : பழுத்த மாம்பழம் - 2, வெல்லம் - 100 கிராம்.
செய்முறை : மாம்பழத்தை தோல் சீவி அரைத்து (மிக்ஸியில்) வெய்யிலில் ஒரு தாம்பாளத்தில் ஊற்றி இரண்டு நாள் காய விடவும். நன்கு இறுக்கிவிடும். பின்பு வெல்லத்தை கரைத்து வடிக்கட்டி பாகு காய்ச்சி, காய வைத்த மாம்பழக் கூழில் கொட்டி கெட்டியாகக் கிளறவும் ஆறியதும் ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால் சப்பாத்திக்கும், பிரட்டுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.
‘‘அவல் புட்டு’’
தேவையான பொருட்கள் : கெட்டி அவல் - 250 கிராம், தேங்காய்ப் பால் - 100 மி.லி., சர்க்கரை - 50 கிராம், முந்திரி பருப்பு - 10 (நெய்யில் வறுத்தது) ஏலக்காய் பொடி - சிறிதளவு,
டூட்டி ப்ரூட்டி -சிறிதளவு.
செய்முறை : அவலை லேசாக வறுத்து ரவை பதத்தில் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் தேங்காய் பால் சேர்த்து ஆவியில் வேகவிடவும். பின்பு வெந்த புட்டுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேத்து நன்கு கலக்கவும். கடைசியாக நெய்யைச் சேர்த்துக் கிளறி ட்ருட்டி ப்ரூட்டி பழங்களால் அலங்கரிக்கலாம்.
பசி நேரத்திற்கு ஏற்ற டிஃபன் வகை இது! எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகை இது! ‘‘பழப் பொங்கல்’’
தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 250 கிராம், பைனாப்பிள் நறுக்கியது - ஒரு சிறிய கப், வாழைப்பழம் - 1, கிரேப்ஸ், மாம்பழத்துண்டுகள் நறுக்கியது, ஆப்பிள் பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள் - தலா ஒரு கப், நெய் - 4 ஸ்பூன்.
செய்முறை : பாசுமதி அரிசியை ஒன்றுக்கு மூன்று மடங்கு என்ற அளவில் விட்டு 4 விசில் விட்டு இறக்கவும். சாதத்தை நெய் விட்டு நன்கு மசித்து நறுக்கி வைத்துள்ள பழங்களை சேர்த்து நன்கு கலக்கவும். மேலே மாதுளை முத்துக்களைத் தூவி அலங்கரித்துக் கொடுக்கவும். சாதம் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளை அப்படியே சாப்பிட வைக்கக் கூடியது இந்த பழப் பொங்கல்.
Post a Comment