சமையல் குறிப்புகள்! தேங்காய் அரைத்த குழம்பு
நாகர்கோவிலில் தினப்படி வீடுகளில் வைக்கும் குழம்பு இது. இந்தக் குழம்புக்கு எருவுளி, புளிங்கறி, தாளகம் என்று பல பேர்கள் உண்டு. தயாரிப்பில் க...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6503.html
நாகர்கோவிலில் தினப்படி வீடுகளில் வைக்கும் குழம்பு இது.
இந்தக் குழம்புக்கு எருவுளி, புளிங்கறி, தாளகம் என்று பல பேர்கள் உண்டு. தயாரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் மாறுதல் இருக்கும். இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய்- 6 அல்லது 7 புளி - 1 நெல்லிக்காய் அளவு (ஊற வைக்கவும்). மஞ்சள் பொடி - ½ தேக்கரண்டி, தேங்காய் - ½ மூடி, எண்ணெய்-தேவையான அளவு, உப்பு, வெல்லம் - தேவைக்கேற்ப.
செய்முறை: காய்ந்தமிளாகாய், சீரகம், மஞ்சள்பொடி, தேங்காய் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கி விழுதுடன் சேர்த்து அரைக்கவும். இத்துடன் புளி கரைசலுடன் உப்பு சேர்த்து கொத்திக்க விடவும்.
கீழே இறக்கி வைத்து வெந்தயம் அல்லது கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
Post a Comment