சமையல் குறிப்புகள்! வெந்தயக்கீரை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி & ஒரு கப், வெந்தயக்கீரை & ஒரு கட்டு, பெரிய வெங்காயம் & 1, தக்காளி & 2, மஞ்சள்தூள் & கால் டீஸ்ப...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_105.html
தேவையானவை: பாசுமதி அரிசி & ஒரு கப், வெந்தயக்கீரை & ஒரு கட்டு, பெரிய வெங்காயம் & 1, தக்காளி & 2, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, தேங்காய்ப்பால் & அரை கப். அரைக்க: இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 3 பல், சீரகம் & அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 4, தனியா & ஒரு டீஸ்பூன், கரம்மசாலாதூள் & அரை டீஸ்பூன். தாளிக்க: பட்டை & ஒரு துண்டு, நெய் & 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் ஊறவைத்து, முக்கால் பதமாக வடித்துக்கொள்ளுங்கள். கீரையை இலைகளாக ஆய்ந்து, நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். நெய்யை காயவைத்து, பட்டை தாளித்து, கீரையைச் சேருங்கள். பிறகு, வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளியைப் போட்டு, அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். அத்துடன் தேங்காய்ப்பால் சேருங்கள். பிறகு, தேவையான உப்புப் போட்டு, வடித்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி, சேர்ந்தாற்போல வந்ததும் அழுத்திவிட்டு, ஒரு தட்டால் மூடிவைத்து, சிறுதீயில் 10 நிமிடம் ‘தம்’ போட்டு இறக்குங்கள்.
அருமையான சுவையுடன் வித்தியாசமாக இருக்கும் இந்த பிரியாணி.
Post a Comment