சமையல் குறிப்புகள் ! வட்டலப்பம் --மக்மல் பூரி -- கொலூஷா -- கஸார் -- கூவே
வட்டலப்பம் தேவையான பொருட்கள் முட்டை - 6 சர்க்கரை - 1 1/4 சுண்டிய பால் - 100 கிராம் முந்திரி பருப்பு - 10 கசகசா - 1 தேக்கரண்டி செய்முறை மு...
https://pettagum.blogspot.com/2011/01/blog-post_7288.html
வட்டலப்பம்
தேவையான பொருட்கள்
முட்டை - 6
சர்க்கரை - 1 1/4
சுண்டிய பால் - 100 கிராம்
முந்திரி பருப்பு - 10
கசகசா - 1 தேக்கரண்டி
செய்முறை
முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் சர்க்கரையைக் கலந்து மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக் கலந்து கொள்ளவும்.
நன்கு நுரை வந்ததும் எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் சிறிது உப்பு சேர்க்கவும்.
முந்திரிப்பருப்பினை கசகசாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய முட்டையில் பால், அரைத்து வைத்துள்ள முந்திரி, கசகசாவை சேர்த்து ஸ்பூனால் கலக்கவும்.
குக்கர் பாத்திரத்தில் சிறிது நெய் தடவி, அதில் இந்த மாவினை ஊற்றி, மூடிவைத்து வேகவிடவும்.
15 நிமிடங்கள் கழித்து இறக்கி, ஆறவைத்து பிறகு துண்டுகள் போட்டுச் சாப்பிடவும்
===================================================================
மக்மல் பூரி
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
தேங்காய் - 1 மூடி
அரிசிமாவு - 50 கிராம்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - ஒரு சிட்டிகை
கலர் பவுடர் - 1/2 தேக்கரண்டி
செய்முறை
தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் பாலை மைதா மாவில் ஊற்றி, உப்பு சேர்த்து பூரி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரிசிமாவில் நெய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
மைதா மாவு உருண்டைகளை பூரி போல் தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பூரி மேல் சிறிது அரிசிமாவைத் தடவி அதன்மீது மற்றொரு பூரியை வைக்கவும்.
அதன்மீதும் அரிசி மாவினைத் தடவி மேல் மற்றொரு பூரியை வைக்கவும். இப்படியே ஐந்து பூரிகளை வைக்கவும்.
அதனை சேர்த்து உருளையாக உருட்டவும். பிறகு அதனைக் குறுக்காக 3 அல்லது 4 துண்டுகளாக வெட்டவும்.
ஒவ்வொரு துண்டையும் பூரி கட்டைக் கொண்டு, வெஜிடபிள் பப்ஸ் தோற்றத்திற்கு லேசாக தேய்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு தண்ணீராக இல்லாமல் கெட்டியாக இருக்குமாறு காய்த்துக் கொள்ளவும்.
பாகில் கலர் பொடியைச் சேர்த்துக் கொள்ளவும். பொரித்து வைத்துள்ள பூரித் துண்டுகளை எண்ணெய் வடித்து பாகில் போட்டு எடுக்கவும்
======================================================================கொலூஷா
கொலூஷா
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - பொரித்து எடுக்க சிறிது
செய்முறை
மைதா மாவில் சர்க்கரை, நெய், தயிர், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடவும்.
பிறகு, மாவினை சிறு சிறு உருண்டைகளாக்கி, பூரிப் போல் இட்டுக் கொள்ளவும்.
மூன்று பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்து அமுக்கி ஓரங்களை நன்கு அழுத்திவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
சர்க்கரையில் 200 மி.லி தண்ணீர் விட்டு பாகு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பொரித்து எடுத்தவற்றை பாகில் போட்டு மூன்று, நான்கு நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் எடுத்துப் பரிமாறவும்.
=====================================================================
கஸார்
தேவையான பொருட்கள்
பேரீச்சம் பழம் - 25 கிராம்
நெய் - 100 கிராம்
கோதுமை மாவு - 6 கப்
ரவை - 1 1/2 கப்
வெள்ளரி விதை - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 25 கிராம்
கொப்பரைத் துருவல் - 50 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
பாதாம் பருப்பு - 25 கிராம்
செய்முறை
வாணலியில் நெய் விட்டுக் காய்ந்தவுடன் பேரீச்சம் பழத்தை விதை நீக்கிச் சிறு துண்டுகளாய்ப் போட்டுப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
மீதியுள்ள நெய்யில் கோதுமை மாவு மற்றும் ரவையைக் கொட்டிப் பொன்னிறமாகும் வரை கிளறவும்.
அடுத்து வறுத்த பேரீச்சம் பழம், வெள்ளரி விதை, உலர்ந்த திராட்சை, தோலுரித்துத் துண்டுகளாக்கிய பாதாம் பருப்பு, கொப்பரை, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிச் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
===================================================================
கூவே
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
தேங்காய் - 2
சர்க்கரை - 2 கப்
முட்டை - 3
பன்னீர் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
தேங்காயைத் துருவி பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சர்க்கரையைக் கலந்து மிக்ஸியில் போட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை அடித்து எடுத்துக் கொள்ளவும்.
மைதா மாவு, தேங்காய்பால், முட்டை சர்க்கரை கலவை, பன்னீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் பதத்தில் கலக்கி வைத்துக் கொண்டு, இரண்டு பாத்திரத்தில் பாதி பாதி ஊற்றவும்.
ஒரு மாவை வெள்ளையாகவே வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் இருக்கும் மாவிற்கு விரும்பும் வண்ணப் பொடியைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஓவன் ட்ரேயில் சிறிது நெய் தடவி கலர் மாவை இரண்டு கரண்டி ஊற்றி ஓவனில் வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து வெளியில் எடுத்து வெள்ளை மாவு இரண்டு கரண்டி அதன் மீது ஊற்றி மீண்டும் இரண்டு நிமிடம் வேகவைக்கவும்.
இதேபோல் மீண்டும் மாற்றி மாற்றி வெள்ளை மாவையும் கலர் மாவையும் ஊற்றவும்.
வெந்தபின் வெளியில் எடுத்து ஆறியபிறகு டைமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
இதனை மூன்று நான்கு வண்ணங்களில் கூடச் செய்யலாம். அதற்கு தகுந்தாற்போல் மாவினைப் பிரித்து வண்ணப்பொடியினை சேர்த்துக் கொள்ளவும்.
ஓவன் இல்லாதவர்கள் குக்கரில் தண்ணீர் வைத்து குக்கர் பாத்திரத்தில் இதேபோல் செய்யவும். குக்கரில் வெயிட் போடக்கூடாது.
=====================================================================
Post a Comment