அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். சில `டிப்ஸ்' இங்கே...
மனிதனுக்கு இயற்கையின் அற்புதக் கொடை தேன். உணவுப் பொருளாக, மருத்துவப் பொருளாக, அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். தேனை எப்பட...
https://pettagum.blogspot.com/2011/01/blog-post_26.html
மனிதனுக்கு இயற்கையின் அற்புதக் கொடை தேன். உணவுப் பொருளாக, மருத்துவப் பொருளாக, அழகுசாதனப் பொருளாக தேனின் பயன்பாடுகள் ஆயிரமாயிரம். தேனை எப்படியெலëலாம் பயன்படுத்தலாம் என்பதற்கான சில `டிப்ஸ்' இங்கே...
`தேனகம்':
இரண்டு குவளை ஆரஞ்சு அல்லது எலுமிச்சைச் சாறுடன் 8 குவளை தண்ணீரும், உங் கள் ருசிக்கேற்ப தேனும் சேருங்கள். ஐஸ் கட்டிகள் சேர்த்து `ஜில்'லென்று பருகுங்கள்.
தேன்- அன்னாசிப்பழ ரசம்:
நசுக்கிய அனëனாசிப் பழத்தை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன், அரைக் குவளை தேன், அரைக் குவளை எலுமிச்சைச் சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேருங்கள். சுவையான, ஆரோக்கியமë தரும் `சாலட்' தயார்.
`சக்தி' பானம்:
இயற்கை `யோகர்ட்' 150 மி.லி.யுடன், அதே அளவு ஆரஞ்சுச் சாறு, 30 மி.லி. தேன் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்குங்கள். நுரை பொங்க கண்ணாடிக் குவளையில் ஊற் றிப் பரிமாறுங்கள்.
சூடான பானத்தில்...:
காபி, டீ போன்றவை பருகும்போது `கலோரி'களை குறைக்க விரும்புகிறீர்களா? சர்க் கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரையை விட தேன் இனிப் பானது என்பதால் கொஞ்சம் சேர்த்தாலே போதுமானது.
`தேன் வாழைக்கனி':
வாழைப்பழத்தைத் தோலை உரித்துவிடëடு துண்டு துண்டாக்குங்கள். அவற்றினë மீது தேனை ஊற்றுங்கள். சுவையான பழ உணவு ரெடி!
தேன் `பேசியல்':
நன்றாக அரைக்கப்பட்ட பாதாம் பருப்பு ஒரு மேஜைக்கரண்டி, உலர் ஓட்ஸ் 2 மேஜைக் கரண்டியுடன், ஒரு மேஜைக் கரண்டி தேன் சேர்த்துக் கலந்துகொள் ளுங்கள். அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையைக் கொண்டு உஙëகள் முகத் தில் மென்மையாக `மசாஜ்' செய்யுங்கள். முகமெங்கும் சீராகத் தடவி உலர விடுங் கள். வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். முகம் இப்போ `பளிச்'!
சாப்பிடலாம்... முகத்தில் பூசலாம்...:
ஒரு வெள்ளரியைச் சாறாக்கி, அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேருங்கள். அதை முகத்தில் பூசி, உலர்ந்ததும் முகத்தைக் கழுவுங்கள். முகம் பொலிவு பெறக் காணுங்கள். இந்தச் சாறை ஒரு வாரம் வரை `பிரிட்ஜில்' வைத்திருந்து பயன்படுத்தலாம்; பருகலாம்.
குளியலுக்கு...:
உங்கள் தேகம் தகதகவென்று மின்ன வேண்டுமா? நீங்கள் குளிக்கும் வெந்நீரில் கால் குவளை தேனë கலந்து குளியுங்கள். குறிப்பாக உலர்ந்த சருமக்காரர்களுக்கு இக்குளியல் மிகவும் ஏற்றது. எகிப்து பேரழகி கிளியோபாட்ரா பயன்படுத்திய அழகுக் குறிப்புங்க இது!
முகத்தின் ஈரப்பதம் காக்க...:
குளிர்காலத்துக்கு ஏற்ற குறிப்பு இது. 2 மேஜைக்கரண்டி தேன், 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து, முகத்தில் சீராகப் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள்.
கரும்புள்ளிகள் மறைய...:
வெந்நீரையும், உப்பையும் சேர்த்து, அதை பஞ்சால் தொட்டு முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து அழுத்துஙëகள். பினëனர் அதன் மீது தேனில் நனைத்த பஞ்சை வைத்துத் தடவுங்கள். சிறிதுநேரம் கழித்துக் கழுவி, உலர விடுங்கள்.
தொண்டை இதமாக...:
தொண்டை வலியா? அதற்கான அறிகுறìயா? எலுமிச்சைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகுங்கள்.
கேசம் பளபளக்கும்:
தலைமுடிக்கு ஷாம்பூ தேய்த்துக் குளித்தபிறகு, ஒரு தேக்கரண்டி தேன், புத்தமëபுதிய எலு மிச்சைச் சாறு, 4 குவளை வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கேசத்தை நனையுங்கள். அப்படியே உலர விடுங்கள். கேசம் நரைத்துவிடும் என்று பயப்படாதீர்கள். பளபளக்கும்.
`கொழுப்பை'க் கட்டுப்படுத்தும்:
தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவìல் படுக்கப் போகும்முனëபும் ஒரு குவளை வெந் நீரில் தேன், கிராம்புப் பொடி சேர்த்துப் பருகுங்கள். உங்கள் உடம்பில் தேவையற்ற கொழுப் புச் சேர விடாது இது.
தலைமுடியின் வறட்சியைப் போக்கலாம்:
தேனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து உங்கள் தலைமுடியின் நுனிகளில் தடவுங்கள். பின்னர், வெந்நீரில் நனைத்த துணியால் 20 நிமிடங்கள் தலைமுடியைச் சுற்றி வையுங்கள். பின்னர் வழக்கம்போல் ஷாம்பூ போட்டோ, போடாமலோ குளியுங்கள். தலைமுடியின் வறட்சியைப் போக்கவும், நுனிகளில் சுருண்டுகொள்வதையும் தடுக்கவும் இந்த உத்தி உதவும்.
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சி-யால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
அதிகாலை-யிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்த-வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனை-யாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.
நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டு-விட்டால் உடம்பு அவ்வளவுதான்.
ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.
மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.
படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.
ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும். 120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.
இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். நமது உடலுக்கு கார்-போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.
சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசி-யின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்-குழாய் தொடர்பான சில தொல்லை-கள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது. ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங் டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
Post a Comment